டெல்லி: பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது உருவம் பொறித்த நாணயத்தை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது.தமிழக முன்னாள் முதல்வரும் திராவிட இயக்க நிறுவனர்களில் ஒருவருமான மறைந்த பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழா இன்று தொடங்குகிறது.
அவரது நினைவாக, அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அரசியல், நாடகம், சினிமா, தமிழ், இலக்கியம் ஆகிய துறைகளில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய அரும்பணிகளை கெளரவிக்கும் வகையில் இந்த நாணயம் வெளியிடப்படுகிறது.