வியாழக்கிழமை, நவம்பர் 5, 2009, 12:17 [IST]
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்தாண்டு மண்டல பூஜைகள் வருகிற 15ம் தேதி தொடங்குகின்றன.
இதையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக செங்கனூர் ரயில் நிலையத்தில் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
வருகிற 15ம் தேதி முதல் ஜனவரி 20ம் தேதி வரை இந்த சிறப்பு நிறுத்தம் அமலில் இருக்கும்.
சென்னை - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் - புதுடில்லி, கன்னியாகுமரி - பெங்களூர், திருவனந்தபுரம் - ஐதராபாத், திருவனந்தபுரம் - மங்களூர் ஆகிய ரயில்கள் பக்தர்களின் வசதிக்காக செங்கனூரில் 5 நிமிடம் வரை நின்று செல்லும்.