புதன்கிழமை, நவம்பர் 4, 2009, 17:17 [IST]
டெல்லி: இலங்கை காலேயில் நடைபெறவிருந்த சர்வதேச திரைப்பட விழா அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
'நிதி நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு காலே திரைப்பட விழாவை நடத்த முடியவில்லை' என விழாவின் ஒருங்கிணைப்பாளர் மெனிகா வான் டெர் பூர்டன் அறிவித்துள்ளார்.
ஆனால் அரசுத் தரப்பில் பாதுகாப்புக்காக இந்த விழாவுக்கு கிரீன் சிக்னல் கிடைக்காததாலேயே தள்ளிப் போனதாகவும் கூறப்படுகிறது.
இலங்கை தேசிய திரைப்படக் கழகத்துடன் இணைந்து இலங்கை சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்திருந்த விழா இது. இலங்கை திரைப்பட இயக்குநர் விமுக்தி ஜெயசுந்தராவின் ஆஹாசின் வேட்டெ என்ற படம் இந்த விழாவில் திரையிடப்படுவதாக இருந்தது. ஸ்பெயின் திரைப்பட விழாவில் பங்கேற்ற படம் இது.