கரூர்: சென்னை சட்டக் கல்லூரி வன்முறை தொடர்பாக தேடப்பட்டு வந்த மாணவர் மனோஜ்குமார் இன்று கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
கரூர் மாவட்டம் அரவாக்குறிச்சி அருகே உள்ள ராஜபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் மனோஜ்குமார். இவர் சென்னை சட்டக் கல்லூரியில் படித்து வருகிறார்.
கடந்த 12ம் தேதி நடந்த பெரும் வன்முறை தொடர்பாக இவரும் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் இன்று காலை கரூர் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனோஜ்குமார் சரணடைந்தார்.