Oneindia Mobile
New Videos here on ur Mozilla -Get them!
ரணில் கார் மறிப்பு-சிபிஐ கெரோ
Thursday, November 20 2008

திருவாரூர்: திருவாரூர் வந்த முன்னாள் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் காரை நூற்றுக்கணக்கான இந்திய கம்யூனிஸ்ட் தொண்டர்கள் வழி மறித்து கொரா செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை சென்னை வந்த அவர் விமானம் முலம் திருச்சி சென்றார். அங்கிருந்து திருவாரூர் சனீஸ்வர பகவான் ஆலயத்துக்குச் சென்று வழிபட்டார்.

பின்னர் காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அவரது காருக்கு முன்னும் பின்னும் ஏராளமான போலீஸ் வாகனங்கள் சென்றன.

இந்த வாகன அணி வகுப்பு திருவாரூர் வந்தபோது திருக்கொல்லிக்காடு என்ற இடத்தில் அதை நூற்றுக்கணக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் கறுப்புக் கொடிகளுடன் வழி மறித்தனர்.

இலங்கையில் போர் நிறுத்தம் சாத்தியமில்லை என்று கருத்து தெரிவித்த ரணிலுக்கு எதிராக கோஷமிட்ட தொண்டர்கள், அவரது காரை சுற்றி வளைத்தனர்.

அவர்களை போலீசாரால் அப்புறப்படுத்த முடியவில்லை. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.

இதையடுத்து கூடுதல் போலீசார் விரைந்து வந்து 30 நிமிடஙகள் போராடி சிபிஐ தொண்டர்களை அப்புறப்படுத்தி ரணில் கார் செல்ல வழி ஏற்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக 49 சிபிஐ தொண்டர்களையும் அந்தக் கட்சியி்ன் பஞ்சாயத்துத் தலைவர் பாண்டியனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பின்னர் ரணில் மதுரை புறப்பட்டுச் சென்றார். மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய பின் விமானம் சென்னை திரும்பும் ரணில் பின்னர் கொழும்பு செல்கிறார்.

போர் நிறுத்தம் சரிவராது: ரணில்

முன்னதாக சென்னை வந்த ரணில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரணில், டெல்லியில் சமீபத்தில் பிரணாப் முகர்ஜியுடன் விரிவாகப் பேசினேன். அவர் இந்தப் பிரச்சினையை சிறப்பாக கையாண்டு வருகிறார்.

அதேபோல, பாஜக தலைவர் அத்வானி, சிபிஎம் தலைவர்கள் ஆகியோரையும் சந்தித்துப் பேசினேன்.

2005ம் ஆண்டு இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த நிலையில் மீனவர்கள் பிரச்சினை அவ்வப்போது தலை தூக்கி வருவது வருத்தம் தருகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினை குறித்து விரிவாக பேச நான் விரும்பவில்லை. இதனால் அடுத்த நாட்டின் விவகாரத்தில் நான் தலையிடுவதாக அமைந்த விடும்.

வன்னியில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, உடைகள், இருக்க இடம் ஆகியவை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

தமிழர் தேசிய கட்சிகளும், முஸ்லீம் கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத்து இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பேச்சு நடத்தி, இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும்.

அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியதான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும்.

தற்போது இலங்கையில் உள்ள நிலையைக் கருத்தில் கொள்ளும்போது போர் நிறுத்தம் சாத்தியமல்ல என்றே தோன்றுகிறது. போர் நிறுத்தம் சரிப்பட்டு வராது என்றே நான் கருதுகிறேன்.

எனது இந்திய பயணத்தின்போது நான் சந்தித்த தலைவர்களிடமும் இதைத் தெரிவித்துள்ளேன்.

போர் நிறுத்தத்தால் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் வந்து விடாது. அரசியல் தீர்வு ஒன்றே பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி என்றார் அவர்.

அவரது இந்தக் கருத்தைக் கண்டித்து தான் சிபிஐ தொண்டர்கள் அவரது காரை வழிமறித்தனர்.
Oneindia Mobile

»Home »News  »Entertainment  »Currency  »Free Classifieds  »Cricket  »TV Schedules  »In Theatres  »Weather  »Languages  »Horoscope 

© Greynium Information Technologies Pvt. Ltd.