மதுரை: மதுரை அருகே பெண்களை கடத்தி மானபங்கம் செய்ய முயன்ற போலீஸ்காரர் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
திருச்சியில் ரயில்வே போலீசாக பணியாற்றி வருபவர் சரவணன். இவர் திருச்சி பஸ் நிலையத்தில் இருந்த 2 பெண்களை கடத்தி மானபங்கம் செய்ய முயன்றதாக புகார் எழுந்தது.
அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை செய்து சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ரயில்வே காவலர் சரவணன் தனக்கு ஜாமின் வேண்டி உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி பாட்ஷா, ஒரு போலீஸ்காரரே இது போன்ற செயலில் ஈடுபட்டிருப்பது துரதிஷ்டமானது என வேதனை தெரிவித்ததோடு சரவணனின் ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.